சேலம் ஏற்காடு அடிவாரம் நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் மூத்தோர் இல்லம் மற்றும் அய்யந்திருமாளிகையில் இயங்கி வரும் மாணவ, மாணவியர் இல்லத்திலும் இந்தியாவின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நேசக்கரங்கள் இல்ல தலைவர் செல்லதுரை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நேசக்கரங்கள் இல்ல நிறுவன செயலர் பெரியசாமி இந்திய தேசிய கொடியை ஏற்று வித்தார். இல்ல கண்காணிப்பாளர் தெய்வராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் நேசக்கரங்கள் இல்ல மாணவி சங்கவி ஓவிய போட்டியில் முதல் பரிசு பெற்றார். இவருக்கு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. இராமன் அவர்களிடம்மிருந்து கேடயமும், பாராட்டுச் சான்றும் பெற்றார், மாணவிக்கு இவ்விழாவில் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறந்த சேவை பணியாற்றிய இல்ல மூத்தோர்கள், இல்ல பணியாளர்களுக்கு பொன்னாடை அனிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
தேசதந்தை மகாத்மாகாந்தி திருவுருவப்படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இல்ல மேலாளர் துரைசாமி, செவிலியர் ஜான்சி, விடுதி வார்டன் மதன், கோமதி, பானு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.